பூட்டி இருந்த வீட்டிலிருந்து மாயமாய் மறைந்த சேஷாத்ரி ஸ்வாமிகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சித்தப்பாவும், சித்தியும் துடித்துப் போனார்கள். சிலநாட்களில் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் சேஷாத்ரி இருப்பதாய்த் தகவல் கிட்டி அங்கு சென்று பார்த்தால் அங்குள்ள முக்தீஸ்வரர் கோயிலில் தங்கி இருந்தார் சேஷாத்ரி சுவாமிகள். வீட்டுக்கு வர மறுத்துவிட்டார். தம்பி தினமும் உணவு கொண்டு கொடுத்து வந்தார். கோயிலில் இருந்த பாம்பு அவர் கழுத்தில் மாலையாகத் தலைக்கு மேல் குடையாக ஏறிக்கொண்டு படம் பிடித்துக்கொண்டு நிற்கும். அனைவரும் பயந்து அலறுவார்கள். ஆனால் சேஷாத்ரி வாயைத் திறக்க மாட்டார். தானாகவே வந்தது போல் அந்தப் பாம்பு போய்விடும். தமக்கு உண்பதற்கு அளிக்கப்படும் உணவை லிங்கமாகச் செய்து அர்ச்சனை செய்து கோயில் குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று தம் இருப்பார். அவருக்கு மனதில் பாசபந்தங்கள் அகன்று வைராக்கியம் வந்துவிட்டதை அவர் முகம் காட்டியது. சித்தப்பா அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார்.
அவருடைய தவ வலிமை பிரபலமடைய நாளாவட்டத்தில் அக்கம்பக்கமிருந்து எல்லாம் மக்கள் தரிசிக்க வந்து கொண்டிருந்தனர். கூட்டம் அதிகரிக்கவே அங்கிருந்து ஒருவருக்கும் தெரியாமல் கிளம்பிவிட்டார். நாளவட்டத்தில் பேச்சையும் குறைத்துவிட்டார். முக்கியமான விஷயங்களாக இருந்தால் எழுதிக்காட்டுவார். மெளன சுவாமிகள் என்ற பெயரை மக்கள் சூட்டினார்கள். திண்டிவனம் கோயிலின் யாகசாலையில் தவம் இருக்கவேண்டும் என உள்ளே சென்று அமர்ந்து நான்கு நாட்களாகியும் வெளியே வராமல் போகவே குருக்கள் பயந்து போய்க் கதவைத் திறந்து பார்த்தார். குருக்களுக்கு அவர் கோயிலில் சமாதி நிலையில் தவம் இருந்தது பிடிக்காமல் சேஷாத்ரி சுவாமிகளை வேறெங்காவது போகச் சொன்னார். அங்கிருந்து கிளம்பிய சேஷாத்ரி தான் திருவண்ணாமலைக்குச் செல்வதாக எழுதிக்காட்டிவிட்டுக் கிளம்பி விட்டார். சில மாதங்கள் அங்கேயும் இங்கேயுமாகச் சுற்றினார். படவேடு ரேணுகாம்பாளைத் தரிசித்து அவள் அருளாட்சியில் மூழ்கித் திளைத்தார். வழியில் சந்நியாசிப்பாறையைத் தரிசித்துவிட்டு அருணையம்பதி வந்து சேர்ந்தார் சேஷாத்ரி சுவாமிகள்.
தாம் கடைசியில் வந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம் எனப் புரிந்து கொண்டார். தன்னிலை மறந்து தான் என்பது கரைந்து தானும் அதுவும் ஒன்றாகி அதில் கரைந்தார். இவ்வுலகைத் துறந்து, தன் உடலையும் மறந்து கிட்டத்தட்ட உன்மத்தராய், ஒரு பித்தராய்த் தெருக்களில் அலைந்து திரிந்தார். சித்தப்பா ராமசாமி ஜோசியருக்குத் திருவண்ணாமலையில் சேஷாத்ரி இருப்பது தெரிய வந்து கிளம்பி வந்தார். எப்படியேனும் பிள்ளையை அழைத்துப் போகவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்திருந்தார். இங்கு வந்து சேஷாத்ரி சுவாமிகள் ஒரு பிச்சைக்காரனைப் போல் பரட்டைத்தலையோடும், ஒட்டிய கன்னங்களோடும், குழி விழுந்த கண்களோடும், வாடிய வயிற்றோடு தனக்குத் தானே பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். அங்கேயே தங்கி சேஷாத்ரியைத் தன்னுடன் அழைத்துச் செல்லப் பலவகையிலும் முயன்றார். முடியவில்லை. கடைசியில் அங்கிருந்த அன்னச் சத்திரக்காரரிடம் சேஷாத்ரிக்கு வயிறு நிரம்பச் சாப்பாடு போடச் சொல்லி வேண்டுகோள் விடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.
சேஷாத்ரி சுவாமிகள் கம்பத்து இளையனார் சந்நிதியிலோ, அல்லது திரெளபதி அம்மன் கோயிலிலோ அல்லது ஈசான்ய மடம், துர்கை அம்மன் கோயில் ஆகிய இடங்களிலேயே அமர்ந்து தவத்தில் ஈடுபடுவார். மலை மேல் ஏறிச் சென்று தவம் செய்யப் போனதில்லை. மலை அடிவாரத்திலேயோ பாதாள லிங்க சந்நிதியிலேயோ அமர்வார். தமது பத்தொன்பதாவது வயதில் 1889-ஆம் ஆண்டில் அருணாசலத்திற்கு வந்து சேர்ந்தார் சேஷாத்ரி சுவாமிகள். அருணாசல க்ஷேத்திரத்தைக் குறித்து சேஷாத்ரி சுவாமிகள் கூறுவதாவது, “இந்த க்ஷேத்திரத்தில் தான் அம்மையும், அப்பனும் இணைந்து இவ்வுலகத்து மாந்தர் அனைவரையும் அழைத்து முக்தி கொடுக்கின்றனர். அந்தக் கிருஷ்ணனோ தன் சுதர்சனச் சக்கரத்தைக் கூட வைத்துவிட்டுப் புல்லாங்குழலில் இசைக்கும் கீதங்களுக்கு ஈசன் வெளியே வந்து நடனமாடுகிறான்.” என்பாராம். சேஷாத்ரி சுவாமிகள் வந்து சேர்ந்து சரியாக ஆறு வருடங்களுக்குப் பின்னர் அங்கே இன்னொருவரும் வந்து சேர்ந்தார். அவர் ரமண மஹரிஷி. ரமண மஹரிஷியைப் பாதாள லிங்க சந்நிதி குகைகளில் தவம் செய்கையில் முதலில் கண்டவர் சேஷாத்ரி சுவாமியே தான். அவரைச் சின்ன சாமி என்று அழைப்பாராம். மேலும் ரமணரைக் குறித்து உலகுக்கு அறிவித்தவரும் சேஷாத்ரி சுவாமிகளே ஆகும்.
ரமணரைப் பலவிதங்களிலும் சேஷாத்ரி சுவாமிகள் பாதுகாத்து வந்ததைக் கண்ட மக்கள், சேஷாத்ரி சுவாமிகளை அம்பாள் எனவும், ரமணரை சுப்ரமணியர் அவதாரம் எனவும் அழைத்தனர். அல்லது சேஷாத்ரி சுவாமிகளைப் பெரிய சேஷாத்ரி எனவும், ரமணரைச் சின்ன சேஷாத்ரி எனவும் அழைத்தனர். சேஷாத்ரி சுவாமிகளை அனைவரும் பைத்தியம் எனச் சொல்வதைக் கேட்ட ரமணர் சிரித்துக்கொண்டே இந்த அருணாசலத்தில் மூன்று பைத்தியங்கள். ஒன்று இந்த அருணாசலேஸ்வரர், இரண்டாவது சேஷாத்ரி சுவாமிகள், மூன்றாவது தாம் என்று கூறுவாராம். சில பக்தர்களோ அருணாசலத்தில் மூன்று லிங்கங்கள். ஒன்று அருணாசலமலை, இன்னொன்று சேஷாத்ரி சுவாமிகள், மூன்றாவது ரமணர் என்பார்களாம்.
Friday, December 16, 2011
Wednesday, December 7, 2011
சேஷாத்ரி ஸ்வாமிகள் 4
சேஷாத்ரியின் அத்தை பெண்ணான காகினிக்கும் வேறொரு பையனோடு திருமணம் முடிந்துவிட்டது. இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் துச்சமாய்க் கருதிய சேஷாத்ரிக்கோ இவை எல்லாம் பெரிய விஷயமாய்த் தோன்றவில்லை. எந்நேரமும் பேரருளின் துணையை நாடினார். பூஜையறையில் வழிபட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்த அருணாசல மலையின் சித்திரம் மனதில் பதிந்தது. அவர் அருணாசலத்தை நேரில் கண்டதில்லை. அன்ன ஆகாரமில்லாமல் உறக்கமும் இல்லாமல் நெடுநேரம் துர்கா ஸூக்தம் ஜபித்துக்கொண்டே தன்னை மறந்து இருப்பார். சித்தப்பாவும், சித்தியும் அவரைக் கோபித்தும் பலனில்லை. தொந்திரவு அதிகமாவதாக எண்ணிக் கோயிலுக்குச் சென்றுவிடுவார். வரதராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நிதியிலேயோ அல்லது காமாட்சி கோயிலிலோ அமர்ந்து கொண்டிருப்பார். அம்பாளுக்கு நமஸ்காரம் செய்தவண்ணம் இருப்பார். வீட்டுக்குச் செல்லும் எண்ணமே வராது. சித்தப்பா ராமசாமி அங்குமிங்கும் அலைந்து திரிந்து அவரைக் கண்டுபிடித்து வீட்டில் கொண்டு சேர்ப்பார். சித்தப்பாவின் கட்டளைக்காக ஒரு நாள் இரண்டு நாள் இருந்துவிட்டு மீண்டும் கிளம்பி விடுவார் சேஷாத்ரி ஸ்வாமிகள். அவரைக் கண்டாலே சித்தபிரமை பிடித்தவர் போல் காணப்படுவார். இவர் நிலையைக் கண்டு, பொறுக்க முடியாமல் சித்திக்கும், சித்தப்பாவுக்கும் வயிறு எரிந்தது.
அதோடு சேஷாத்ரியின் கண்களுக்கு இறையின் உயர்தன்மை தவிர வேறெதுவும் தெரியவில்லை; புரியவில்லை. தானே மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் சொல்லுவதும், ஆன்ம தரிசனம் கிட்டியதற்கு ஆனந்திப்பதுமாக இருந்தார். பார்க்கிறவர்களுக்கு இது புரியவில்லை. சேஷாத்ரிக்கு மனநலம் கெட்டுவிட்டதாய் நினைத்துக்கொண்டனர். அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். ஆனால் அவரோ அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலைச் சரியாகக் கொடுத்ததோடு தெளிவான ஞான விளக்கமும் கொடுப்பார். அனைவரும் திகைத்துப் போவார்கள். “காமோ கார்ஷீத்” மந்திரத்தை மட்டுமே ஒன்றரை லக்ஷம் முறை ஜபித்ததாய்ச் சொல்லுவார்கள். சில நாட்களில் கோயிலுக்குச் செல்வதையும் நிறுத்திய சேஷாத்ரி காலையிலும் மாலையும் வீட்டில் இருந்துவிட்டு இரவில் மட்டும் மயானம் சென்று ஜபித்து வந்தார். வீட்டிலுள்ளவர்களுக்குப் பலநாட்கள் கழித்தே இது தெரிய வந்தது. ஆகவே அவர்கள் தடுத்தனர். ஆனால் சேஷாத்ரியோ தாம் ருத்ர ஜபம் செய்வதாகவும், ருத்ரபூமியிலேயே அதைச் செய்யவேண்டும் என்பதாகவும் கூறவே சித்தப்பா அவரை ஒரு அறையில் அடைத்துப் பூட்டிவிட்டார். தன்னை அறையில் அடைத்துப் பூட்டியதும் நன்மையே எனக் கருதிய சேஷாத்ரி உள்ளுக்குள்ளே தானும் தாழைப் போட்டுவிட்டு அன்ன, ஆகாரமின்றி ஜபம், தியானம் போன்றவற்றில் ஆழ்ந்துவிட்டார். வெளியே வரவே இல்லை. நான்கு தினங்கள் சென்றுவிட்டன.
பயந்து போன ராமசாமி ஜோசியர் கதவைத் திறந்து சேஷாத்ரியை வெளியே விட்டார். அவரோ மீண்டும் ருத்ர ஜபத்தை ருத்ர பூமியிலேயே செய்ய ஆரம்பித்தார். கடுமையாக உபவாசம் இருந்து உடலை வருத்தி ஜபம் செய்து வந்தார். ஜபம் செய்யச் செய்ய அவர் உள்ளத்தில் பிறந்த ஒளியானது முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. ஆனால் ராமசாமி ஜோசியரோ கவலை அதிகமாகி சேஷாத்ரியைக் கோவிக்க ஆரம்பித்தார். மயானத்துக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சேஷாத்ரியோ வீட்டில் ஏதேனும் வேலை கொடுத்தால் கூட அதைச் செய்கையில் திடீரென வீட்டிற்கு வெளியே சென்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு வருவார். என்னவென்று காரணம் கேட்டால் தேவதைகள் பாடிக்கொண்டு போவதாயும், கந்தர்வர்களும் காணப்படுவதாயும் கந்தர்வ கானம் காதுகளில் கேட்பதாயும் கூறுவார். சேஷாத்ரிக்குப் பைத்தியம் என்றே சித்தப்பா நினைத்து வந்தார். ஆனால் சேஷாத்ரியோ இதைக் கண்டு சிறிதும் கலங்காமல் உலகப்பந்தத்தில் சிக்கித் தவிக்கும் கர்மாக்களைச் செய்து வரும் கர்மிகளுக்கு இவை கஅதில் விழாது என்று கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டே போய்விட்டார்.
சித்தப்பாவோ சேஷாத்ரியின் ஜாதகம் பற்றித் தெரிந்திருந்தும் அவருக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தார். உள்ளூரில் இருந்த உறவினரும், நண்பர்களும் இதையே கூறி வலியுறுத்தினார்கள். ஆனால் அவருடைய சுபாவமும், ஜபம், தவம், ருத்ரபூமியில் வாசம் போன்றவை தெரிந்த பெண் வீட்டுக்காரர்கள் கண்டிப்பாகப் பெண் தர மறுத்துவிட்டனர். சித்தப்பா மனம் உடைந்து போய் சேஷாத்ரியிடம் புலம்ப ஆரம்பித்தார். சேஷாத்ரியோ சித்தப்பாவைத் தேற்றி சமாதானம் செய்தார். கல்யாணம் என்ற பேச்சை ஆரம்பித்தால் தான் வீட்டை விட்டுப் போய்விடுவதாகவும் கூறினார். அதோடு கல்யாணப்பேச்சு நின்று போக உறவினரான பரசுராம சாஸ்திரிகள் என்பவர் சுடுகாட்டிற்குச் சென்று ஜபம் செய்துவிட்டுப் பின்னர் வீட்டிற்குள் நுழைவதை ஏற்கவே இயலாது என்று அடித்துச் சொன்னார். அன்று முதல் சேஷாத்ரி வீட்டினுள் நுழைவதையும் நிறுத்திவிட்டுக்கோயில்கள், குளக்கரைகள், மரத்தடி எனப் பொழுதைக் கழித்தார். அப்போது காஞ்சீபுரத்திற்கு ஹரித்வாரில் இருந்து பாலாஜி சுவாமிகள் என்பவர் தம் நான்கு சீடர்களோடு வந்திருந்தார். அவர் சர்வதீர்த்தக்கரையில் இருந்த விஸ்வநாத ஸ்வாமி ஆலயத்தில் தங்கி இருந்தார். அவரைக் கண்டதும் சேஷாத்ரி உணர்ச்சி வசப்பட்டுக்கால்களில் விழுந்து வணங்கினார். அவரை சாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியாகவே கருதி தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தைக் கூறி அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் மாலையென வழிந்து கொண்டிருந்தது. பாலாஜி சுவாமிகள் சேஷாத்ரியைச் சாந்தம் செய்து அமைதியுடன் இருக்கும்படி கூறித் தம் அருகே அமர வைத்துக்கொண்டார். சேஷாத்ரியும் அவரும் சாஸ்திர சம்பந்தமாகப் பேசி தங்களுக்குள் மகிழ்ச்சி அடைந்தனர். தம் பார்வையாலேயே சேஷாத்ரிக்கு நயன தீக்ஷை கொடுத்துவிட்டார் பாலாஜி சுவாமிகள். சேஷாத்ரி அவருக்கு ஐந்தாவது சீடராக மாறி அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார்.
சுவாமிகள் சேஷாத்ரியின் மனம் இவ்வுலக பந்தங்களைப் பொருட்டாகக் கருதவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். மனதளவில் அவர் ஒரு சந்நியாசியாகவே இருப்பதையும் தெரிந்து கொண்டார். ஆகவே சேஷாத்ரி ஞான சந்நியாசத்துக்கு ஏற்றவர் என்பதைப் புரிந்து கொண்டு அவருக்குச் சந்நியாசிரமம் வழங்கி மஹா வாக்கியங்களையும் உபதேசம் செய்தருளினார். முறைப்படி சந்நியாசம் வாங்கிக் கொண்ட சேஷாத்ரி அந்த பிரம்மானந்தத்தில் தன்னை மறந்து திளைத்தார். அப்போது சேஷாத்ரியின் தகப்பனார் வரதராஜ ஜோசியரின் சிராத்தம் வரவே சித்தப்பா ராமசாமி ஜோசியர் இரண்டு வலிமையான நபர்களின் உதவியோடு தெருவில் அலைந்து திரிந்து கொண்டிருந்த சேஷாத்ரியைக் கட்டிப் பிடித்து வீட்டுக்கு இழுத்து வந்து சேர்த்து ஓர் அறையிலும் போட்டுப் பூட்டினார். சேஷாத்ரியோ தாம் சந்நியாசி எனவும் கர்மங்களுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை எனவும் வாதாடினார். ஆனால் சித்தப்பா விடாமல் அறையைப் பூட்டிச் சாவியைத் தம்மிடமே வைத்திருந்தார். சிராத்தம் முடிந்ததும் புரோகிதர்களை வணங்கி ஆசிகள் பெற வேண்டிய நேரம் வந்தபோது அறையைத் திறந்து சேஷாத்ரியை அழைத்தால் அறை காலி. சேஷாத்ரி அறையில் இல்லை.
அதோடு சேஷாத்ரியின் கண்களுக்கு இறையின் உயர்தன்மை தவிர வேறெதுவும் தெரியவில்லை; புரியவில்லை. தானே மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் சொல்லுவதும், ஆன்ம தரிசனம் கிட்டியதற்கு ஆனந்திப்பதுமாக இருந்தார். பார்க்கிறவர்களுக்கு இது புரியவில்லை. சேஷாத்ரிக்கு மனநலம் கெட்டுவிட்டதாய் நினைத்துக்கொண்டனர். அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். ஆனால் அவரோ அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலைச் சரியாகக் கொடுத்ததோடு தெளிவான ஞான விளக்கமும் கொடுப்பார். அனைவரும் திகைத்துப் போவார்கள். “காமோ கார்ஷீத்” மந்திரத்தை மட்டுமே ஒன்றரை லக்ஷம் முறை ஜபித்ததாய்ச் சொல்லுவார்கள். சில நாட்களில் கோயிலுக்குச் செல்வதையும் நிறுத்திய சேஷாத்ரி காலையிலும் மாலையும் வீட்டில் இருந்துவிட்டு இரவில் மட்டும் மயானம் சென்று ஜபித்து வந்தார். வீட்டிலுள்ளவர்களுக்குப் பலநாட்கள் கழித்தே இது தெரிய வந்தது. ஆகவே அவர்கள் தடுத்தனர். ஆனால் சேஷாத்ரியோ தாம் ருத்ர ஜபம் செய்வதாகவும், ருத்ரபூமியிலேயே அதைச் செய்யவேண்டும் என்பதாகவும் கூறவே சித்தப்பா அவரை ஒரு அறையில் அடைத்துப் பூட்டிவிட்டார். தன்னை அறையில் அடைத்துப் பூட்டியதும் நன்மையே எனக் கருதிய சேஷாத்ரி உள்ளுக்குள்ளே தானும் தாழைப் போட்டுவிட்டு அன்ன, ஆகாரமின்றி ஜபம், தியானம் போன்றவற்றில் ஆழ்ந்துவிட்டார். வெளியே வரவே இல்லை. நான்கு தினங்கள் சென்றுவிட்டன.
பயந்து போன ராமசாமி ஜோசியர் கதவைத் திறந்து சேஷாத்ரியை வெளியே விட்டார். அவரோ மீண்டும் ருத்ர ஜபத்தை ருத்ர பூமியிலேயே செய்ய ஆரம்பித்தார். கடுமையாக உபவாசம் இருந்து உடலை வருத்தி ஜபம் செய்து வந்தார். ஜபம் செய்யச் செய்ய அவர் உள்ளத்தில் பிறந்த ஒளியானது முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. ஆனால் ராமசாமி ஜோசியரோ கவலை அதிகமாகி சேஷாத்ரியைக் கோவிக்க ஆரம்பித்தார். மயானத்துக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சேஷாத்ரியோ வீட்டில் ஏதேனும் வேலை கொடுத்தால் கூட அதைச் செய்கையில் திடீரென வீட்டிற்கு வெளியே சென்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு வருவார். என்னவென்று காரணம் கேட்டால் தேவதைகள் பாடிக்கொண்டு போவதாயும், கந்தர்வர்களும் காணப்படுவதாயும் கந்தர்வ கானம் காதுகளில் கேட்பதாயும் கூறுவார். சேஷாத்ரிக்குப் பைத்தியம் என்றே சித்தப்பா நினைத்து வந்தார். ஆனால் சேஷாத்ரியோ இதைக் கண்டு சிறிதும் கலங்காமல் உலகப்பந்தத்தில் சிக்கித் தவிக்கும் கர்மாக்களைச் செய்து வரும் கர்மிகளுக்கு இவை கஅதில் விழாது என்று கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டே போய்விட்டார்.
சித்தப்பாவோ சேஷாத்ரியின் ஜாதகம் பற்றித் தெரிந்திருந்தும் அவருக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தார். உள்ளூரில் இருந்த உறவினரும், நண்பர்களும் இதையே கூறி வலியுறுத்தினார்கள். ஆனால் அவருடைய சுபாவமும், ஜபம், தவம், ருத்ரபூமியில் வாசம் போன்றவை தெரிந்த பெண் வீட்டுக்காரர்கள் கண்டிப்பாகப் பெண் தர மறுத்துவிட்டனர். சித்தப்பா மனம் உடைந்து போய் சேஷாத்ரியிடம் புலம்ப ஆரம்பித்தார். சேஷாத்ரியோ சித்தப்பாவைத் தேற்றி சமாதானம் செய்தார். கல்யாணம் என்ற பேச்சை ஆரம்பித்தால் தான் வீட்டை விட்டுப் போய்விடுவதாகவும் கூறினார். அதோடு கல்யாணப்பேச்சு நின்று போக உறவினரான பரசுராம சாஸ்திரிகள் என்பவர் சுடுகாட்டிற்குச் சென்று ஜபம் செய்துவிட்டுப் பின்னர் வீட்டிற்குள் நுழைவதை ஏற்கவே இயலாது என்று அடித்துச் சொன்னார். அன்று முதல் சேஷாத்ரி வீட்டினுள் நுழைவதையும் நிறுத்திவிட்டுக்கோயில்கள், குளக்கரைகள், மரத்தடி எனப் பொழுதைக் கழித்தார். அப்போது காஞ்சீபுரத்திற்கு ஹரித்வாரில் இருந்து பாலாஜி சுவாமிகள் என்பவர் தம் நான்கு சீடர்களோடு வந்திருந்தார். அவர் சர்வதீர்த்தக்கரையில் இருந்த விஸ்வநாத ஸ்வாமி ஆலயத்தில் தங்கி இருந்தார். அவரைக் கண்டதும் சேஷாத்ரி உணர்ச்சி வசப்பட்டுக்கால்களில் விழுந்து வணங்கினார். அவரை சாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியாகவே கருதி தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தைக் கூறி அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் மாலையென வழிந்து கொண்டிருந்தது. பாலாஜி சுவாமிகள் சேஷாத்ரியைச் சாந்தம் செய்து அமைதியுடன் இருக்கும்படி கூறித் தம் அருகே அமர வைத்துக்கொண்டார். சேஷாத்ரியும் அவரும் சாஸ்திர சம்பந்தமாகப் பேசி தங்களுக்குள் மகிழ்ச்சி அடைந்தனர். தம் பார்வையாலேயே சேஷாத்ரிக்கு நயன தீக்ஷை கொடுத்துவிட்டார் பாலாஜி சுவாமிகள். சேஷாத்ரி அவருக்கு ஐந்தாவது சீடராக மாறி அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார்.
சுவாமிகள் சேஷாத்ரியின் மனம் இவ்வுலக பந்தங்களைப் பொருட்டாகக் கருதவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். மனதளவில் அவர் ஒரு சந்நியாசியாகவே இருப்பதையும் தெரிந்து கொண்டார். ஆகவே சேஷாத்ரி ஞான சந்நியாசத்துக்கு ஏற்றவர் என்பதைப் புரிந்து கொண்டு அவருக்குச் சந்நியாசிரமம் வழங்கி மஹா வாக்கியங்களையும் உபதேசம் செய்தருளினார். முறைப்படி சந்நியாசம் வாங்கிக் கொண்ட சேஷாத்ரி அந்த பிரம்மானந்தத்தில் தன்னை மறந்து திளைத்தார். அப்போது சேஷாத்ரியின் தகப்பனார் வரதராஜ ஜோசியரின் சிராத்தம் வரவே சித்தப்பா ராமசாமி ஜோசியர் இரண்டு வலிமையான நபர்களின் உதவியோடு தெருவில் அலைந்து திரிந்து கொண்டிருந்த சேஷாத்ரியைக் கட்டிப் பிடித்து வீட்டுக்கு இழுத்து வந்து சேர்த்து ஓர் அறையிலும் போட்டுப் பூட்டினார். சேஷாத்ரியோ தாம் சந்நியாசி எனவும் கர்மங்களுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை எனவும் வாதாடினார். ஆனால் சித்தப்பா விடாமல் அறையைப் பூட்டிச் சாவியைத் தம்மிடமே வைத்திருந்தார். சிராத்தம் முடிந்ததும் புரோகிதர்களை வணங்கி ஆசிகள் பெற வேண்டிய நேரம் வந்தபோது அறையைத் திறந்து சேஷாத்ரியை அழைத்தால் அறை காலி. சேஷாத்ரி அறையில் இல்லை.
Sunday, December 4, 2011
சேஷாத்ரி ஸ்வாமிகள் - 3
அங்கிருந்த சேஷாத்ரியும், மரகதமும் பயந்து போனார்கள். மரகதத்தின் மனதில் கவலை புகுந்தது. கணவரிடம் காரணம் கேட்க அவர் ஆனந்தக் கண்ணீர் எனச் சமாளித்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். சேஷாத்ரியும் மேலே எதுவும் பேசாமல் பாடசாலைக்குச் சென்று விட்டார். மகன் சென்ற பின்னர் வரதராஜ ஜோசியர் மனைவியை அருகில் அழைத்து, “மரகதம், நான் சொல்வதைக் கேட்டு உன் மனதைத் திடமாக வைத்துக்கொள். காமாட்சி என்னை அழைக்கிறாள். நாளை சூரியோதயத்திற்கு முன்னர் நான் கிளம்பிவிடுவேன். நம் மகன் சேஷாத்ரி காமாட்சி அருளால் பிறந்தவன் பெரும்புகழோடு வாழப் போகிறான். ஆனால் அதைக் காண நான் இருக்கப் போவதில்லை. நீ இன்னும் சிறிது காலம் இருந்து சேஷாத்ரியின் புகழைக் கண்களால் கண்டு காதுகளால் கேட்டு இன்புற்றுப் பின்னர் வந்து சேர்வாய்.” என்றார். இதைக் கேட்ட மரகதம் மூர்ச்சை அடந்து விழுந்தாள். வரதராஜ ஜோசியர் ஞானம் அதிகம் உள்ளவராகையால் அவருக்கு இதைச் சொல்கையில் எந்தவிதமான வருத்தமும் தெரியவில்லை. ஆனால் மரகதமோ துடிதுடித்துப் போனாள்.
வரதராஜ ஜோசியர் அன்று முழுதும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும், காமாட்சி கோயிலிலும் தியானம் செய்து கொண்டே அமர்ந்திருந்தார். இரவு வெகுநேரம் கழித்தே வீடு வந்தார். உணவே உட்கொள்ளாமல் படுக்கச் சென்றார். இரவு திடீரென அவர் உடல்நலம் குன்றியது. நாடி தளர்ந்து போக விடியற்காலை நேரம், தன் அருமை மகன் சேஷாத்ரியைப் பார்த்து அருகே அழைத்து இறுகத் தழுவிக்கொண்டார். மகனிடம் எத்தனை சாஸ்திரங்கள் கற்றாலும் அனுபவம் ஒன்றே பெரியது என்று வற்புறுத்திக் கூறிவிட்டுத் தன்கண்களை மூடினார். அதன் பின்னர் வரதராஜ ஜோசியர் கண்களைத் திறந்தே பார்க்கவில்லை. மரகதம் மனம் வருந்தி நொந்து போய் அழுது கொண்டே இருந்தாள். நினைவிலும்,கனவிலும் கணவர் நினைவே அவரோடு குடித்தனம் நடத்திய நிகழ்வுகளே முன் வந்து நின்றது. மனவேதனை அதிகமாக அதிகமாக இனி தான் அதிகநாட்கள் உயிரோடு இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு தன் உணவைக் குறைத்துக்கொண்டு சந்நியாசினி போல் எந்நேரமும் தியானமும், ஜபமும் செய்ய ஆரம்பித்தாள். சேஷாத்ரியும், அவர் தம்பியும் தாயின் வேதனையைக் குறைக்க முயல்வார்கள். காமகோடி சாஸ்திரிகள் தாம் அருமையாக வளர்த்த பெண் படும் கஷ்டங்களைக்கண்டு மனம் வருந்தி இடம் மாறினால் சரியாகும் என என்ணிக் காஞ்சீபுரத்திலிருந்தவர்களை வழூர் என்னும் ஊருக்கு அழைத்துச் சென்றார்.
சேஷாத்ரிக்குப் பதினான்கு வயது ஆகிவிட்டபடியால் அவனுக்கு பிரும்ம சூத்திரங்கள், பகவத்கீதை, உபநிடதம் ஆகியவற்றைப் போதித்தார் பாட்டனார் காமகோடி சாஸ்திரிகள். தன் வம்சத்திற்கே உரிய மந்திர உபதேசங்களும் செய்து வைத்தார். தனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். பதினைந்து வயதில் திருவாங்கூர் திவானாக இருந்த சர் சி.பி.ராமசாமி ஐயரின் தாய்வழிப்பாட்டனார் ஆன வெங்கடசுப்பையர் வீட்டில் ஶ்ரீமத் பாகவதமும், ராமாயணமும் பிரவச்னம் செய்தார் சேஷாத்ரி. சிறுவன் இவ்வளவு அழகாய் ஸ்லோகங்களைக் கூறிப் பொருளும் கூறுவதைக் கண்ட அனைவரும் வியந்தனர். இதன் நடுவில் காமகோடி சாஸ்திரிகள் தாம் வயதாகிவிட்டதால் சந்நியாசம் வாங்கிக்கொள்ள நினைத்து சந்நியாசம் வாங்கிக்கொண்டு காஞ்சியிலேயே வரதராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நிதியிலேயே தங்கினார். மரகதம் தினமும் அங்கே பிள்ளைகளுடன் சென்று பிக்ஷை அளித்து வந்தாள். பின்னர் அவரின் சகோதரர் வந்து அவரை அழைத்துச் சென்றுவிட சேஷாத்ரி தம் தாய், தம்பியோடு மீண்டும் காஞ்சிபுரத்தில் சித்தப்பா ராமசுவாமி ஜோசியரின் பாதுகாப்பில் இருந்து வரலாயினார். அப்போது காஞ்சிக்கு மேற்கே இருக்கும் தாமல் என்னும் ஊரில் அவரின் அத்தை வெங்கடலக்ஷ்மி என்பவர் வசித்து வந்தார்.
வெங்கடலக்ஷ்மிக்கு காகினி என்னும் பெயருள்ள பெண் ஒருத்தி கல்யாணத்துக்குத் தயாராக இருந்தாள். அவளை சேஷாத்ரிக்கு மணமுடிக்கவேண்டுமென அத்தையார் எண்ணம். சேஷாத்ரி புத்தி கூர்மையோடு அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்ததோடு, தன் அன்னையிடம் கற்ற சங்கீதப் பயிற்சி மூலம் தன் தாத்தாவான காமகோடி சாஸ்திரிகள் இயற்றிய தேவி கீர்த்தனங்களை நன்கு பாடவும் செய்வார். ஆகவே அவரின் தேஜஸும், அழகும் மனதையும், கவர அத்தையார் தன் சகோதரரிடம் வந்து சேஷாத்ரிக்கும், காகினிக்கும் திருமணம் முடிப்பது குறித்துப் பேச்சைத் தொடங்கினாள். ஆனால் ராமசுவாமி ஐயரோ திட்டவட்டமாக அதை மறுத்தார். வெங்கடலக்ஷ்மிக்கு துக்கம் ஒருபுறம்,கவலை மறுபுறம். அண்ணனிடம் வற்புறுத்திக் கேட்க, ராமசுவாமி ஜோசியர், சேஷாத்ரியின் ஜாதகத்தை அவர் ஆழமாக அலசிப் பார்த்ததாயும், அது சந்நியாச யோக ஜாதகம் எனவும் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதில்லை; குடும்ப வாழ்க்கையே கிட்டையாது என்றும் கூறினார். அண்ணனும், தங்கையும் பேசிக்கொண்டிருந்தது அங்கே ஓரமாக முற்றத்தில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்த மரகதத்தின் காதுகளிலும் விழுந்து அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படியே மயங்கிக் கீழே விழுந்தாள். சேஷாத்ரி பலவிதங்களிலும் தாயைத் தேற்றினார். சகல சாத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவருக்குத் தன் எதிர்காலம் குறித்தும் ஓரளவு தெரியும். அவர் மனமும் அதிலேயே நாட்டத்தைச் செலுத்தி வந்தது. என்றாலும் தாய்க்கு அத்தனை வெளிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டாம் என்றே நினைத்தார்.
மரகதத்துக்கு அன்றிலிருந்து தேக ஆரோக்கியம் குன்றிப் போக ஆரம்பித்தது. தன் அருமை மூத்தமகனை, காமாட்சியின் அனுகிரஹத்தால் பிறந்தவனை சந்நியாசிக் கோலத்தில் எப்படிக் காண்பது எனத் துடித்துப்போனாள். நினைத்து நினைத்து உருகிய மரகதம் படுத்த படுக்கையாகவே ஆனாள். மருந்து உட்கொள்ளவும் திடமாக மறுத்துவிட்டாள். சேஷாத்ரியும் தாயின் அன்பையும் அவளின் தற்போதைய நிலையையும் எண்ணி எண்ணி மனம் வருந்தினார். ஒரு ஏகாதசி தினத்தன்று ஷேசாத்ரியைத் தன்னருகே அழைத்த மரகதம் “அம்ப சிவே” என்னும் தன் பெரியப்பாவும், தன்னை வளர்த்தவருமான காமகோடி சாஸ்திரிகளின் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டாள். இயன்றவரை தானும் பாடினாள். பின்னர் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தில் இருந்து
“ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி” என்ற ஸ்லோகத்தை சேஷாத்ரியின் மார்பில் அடித்து மும்முறை கூறினாள். இப்படியாக அன்னை மூலமே சேஷாத்ரி பிரம்ம ஞான தத்துவத்தை உபதேசம் பெற்றார். இதன் பின்னர் அருணாசல, அருணாசல, அருணாசல என்று மும்முறை வாய்விட்டுக் கூறினாள். அருணாசல மகிமையைக்கூறும் ஸ்லோகத்தையும் தன் மைந்தன் நெஞ்சில் கை வைத்துக் கூறினாள். அதோடு அவள் உயிர் பிரிந்தது. தாயும் இன்றித் தகப்பனும் இன்றிச் சித்தப்பாவின் ஆதரவோடு வாழ ஆரம்பித்தனர் சகோதரர் இருவரும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமையால் அண்ணன் குழந்தைகளைத் தம் கண்மணி போல் பாவித்து வளர்த்து வந்தார் ராமசுவாமி ஜோசியர்.
வரதராஜ ஜோசியர் அன்று முழுதும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும், காமாட்சி கோயிலிலும் தியானம் செய்து கொண்டே அமர்ந்திருந்தார். இரவு வெகுநேரம் கழித்தே வீடு வந்தார். உணவே உட்கொள்ளாமல் படுக்கச் சென்றார். இரவு திடீரென அவர் உடல்நலம் குன்றியது. நாடி தளர்ந்து போக விடியற்காலை நேரம், தன் அருமை மகன் சேஷாத்ரியைப் பார்த்து அருகே அழைத்து இறுகத் தழுவிக்கொண்டார். மகனிடம் எத்தனை சாஸ்திரங்கள் கற்றாலும் அனுபவம் ஒன்றே பெரியது என்று வற்புறுத்திக் கூறிவிட்டுத் தன்கண்களை மூடினார். அதன் பின்னர் வரதராஜ ஜோசியர் கண்களைத் திறந்தே பார்க்கவில்லை. மரகதம் மனம் வருந்தி நொந்து போய் அழுது கொண்டே இருந்தாள். நினைவிலும்,கனவிலும் கணவர் நினைவே அவரோடு குடித்தனம் நடத்திய நிகழ்வுகளே முன் வந்து நின்றது. மனவேதனை அதிகமாக அதிகமாக இனி தான் அதிகநாட்கள் உயிரோடு இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு தன் உணவைக் குறைத்துக்கொண்டு சந்நியாசினி போல் எந்நேரமும் தியானமும், ஜபமும் செய்ய ஆரம்பித்தாள். சேஷாத்ரியும், அவர் தம்பியும் தாயின் வேதனையைக் குறைக்க முயல்வார்கள். காமகோடி சாஸ்திரிகள் தாம் அருமையாக வளர்த்த பெண் படும் கஷ்டங்களைக்கண்டு மனம் வருந்தி இடம் மாறினால் சரியாகும் என என்ணிக் காஞ்சீபுரத்திலிருந்தவர்களை வழூர் என்னும் ஊருக்கு அழைத்துச் சென்றார்.
சேஷாத்ரிக்குப் பதினான்கு வயது ஆகிவிட்டபடியால் அவனுக்கு பிரும்ம சூத்திரங்கள், பகவத்கீதை, உபநிடதம் ஆகியவற்றைப் போதித்தார் பாட்டனார் காமகோடி சாஸ்திரிகள். தன் வம்சத்திற்கே உரிய மந்திர உபதேசங்களும் செய்து வைத்தார். தனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். பதினைந்து வயதில் திருவாங்கூர் திவானாக இருந்த சர் சி.பி.ராமசாமி ஐயரின் தாய்வழிப்பாட்டனார் ஆன வெங்கடசுப்பையர் வீட்டில் ஶ்ரீமத் பாகவதமும், ராமாயணமும் பிரவச்னம் செய்தார் சேஷாத்ரி. சிறுவன் இவ்வளவு அழகாய் ஸ்லோகங்களைக் கூறிப் பொருளும் கூறுவதைக் கண்ட அனைவரும் வியந்தனர். இதன் நடுவில் காமகோடி சாஸ்திரிகள் தாம் வயதாகிவிட்டதால் சந்நியாசம் வாங்கிக்கொள்ள நினைத்து சந்நியாசம் வாங்கிக்கொண்டு காஞ்சியிலேயே வரதராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நிதியிலேயே தங்கினார். மரகதம் தினமும் அங்கே பிள்ளைகளுடன் சென்று பிக்ஷை அளித்து வந்தாள். பின்னர் அவரின் சகோதரர் வந்து அவரை அழைத்துச் சென்றுவிட சேஷாத்ரி தம் தாய், தம்பியோடு மீண்டும் காஞ்சிபுரத்தில் சித்தப்பா ராமசுவாமி ஜோசியரின் பாதுகாப்பில் இருந்து வரலாயினார். அப்போது காஞ்சிக்கு மேற்கே இருக்கும் தாமல் என்னும் ஊரில் அவரின் அத்தை வெங்கடலக்ஷ்மி என்பவர் வசித்து வந்தார்.
வெங்கடலக்ஷ்மிக்கு காகினி என்னும் பெயருள்ள பெண் ஒருத்தி கல்யாணத்துக்குத் தயாராக இருந்தாள். அவளை சேஷாத்ரிக்கு மணமுடிக்கவேண்டுமென அத்தையார் எண்ணம். சேஷாத்ரி புத்தி கூர்மையோடு அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்ததோடு, தன் அன்னையிடம் கற்ற சங்கீதப் பயிற்சி மூலம் தன் தாத்தாவான காமகோடி சாஸ்திரிகள் இயற்றிய தேவி கீர்த்தனங்களை நன்கு பாடவும் செய்வார். ஆகவே அவரின் தேஜஸும், அழகும் மனதையும், கவர அத்தையார் தன் சகோதரரிடம் வந்து சேஷாத்ரிக்கும், காகினிக்கும் திருமணம் முடிப்பது குறித்துப் பேச்சைத் தொடங்கினாள். ஆனால் ராமசுவாமி ஐயரோ திட்டவட்டமாக அதை மறுத்தார். வெங்கடலக்ஷ்மிக்கு துக்கம் ஒருபுறம்,கவலை மறுபுறம். அண்ணனிடம் வற்புறுத்திக் கேட்க, ராமசுவாமி ஜோசியர், சேஷாத்ரியின் ஜாதகத்தை அவர் ஆழமாக அலசிப் பார்த்ததாயும், அது சந்நியாச யோக ஜாதகம் எனவும் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதில்லை; குடும்ப வாழ்க்கையே கிட்டையாது என்றும் கூறினார். அண்ணனும், தங்கையும் பேசிக்கொண்டிருந்தது அங்கே ஓரமாக முற்றத்தில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்த மரகதத்தின் காதுகளிலும் விழுந்து அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படியே மயங்கிக் கீழே விழுந்தாள். சேஷாத்ரி பலவிதங்களிலும் தாயைத் தேற்றினார். சகல சாத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவருக்குத் தன் எதிர்காலம் குறித்தும் ஓரளவு தெரியும். அவர் மனமும் அதிலேயே நாட்டத்தைச் செலுத்தி வந்தது. என்றாலும் தாய்க்கு அத்தனை வெளிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டாம் என்றே நினைத்தார்.
மரகதத்துக்கு அன்றிலிருந்து தேக ஆரோக்கியம் குன்றிப் போக ஆரம்பித்தது. தன் அருமை மூத்தமகனை, காமாட்சியின் அனுகிரஹத்தால் பிறந்தவனை சந்நியாசிக் கோலத்தில் எப்படிக் காண்பது எனத் துடித்துப்போனாள். நினைத்து நினைத்து உருகிய மரகதம் படுத்த படுக்கையாகவே ஆனாள். மருந்து உட்கொள்ளவும் திடமாக மறுத்துவிட்டாள். சேஷாத்ரியும் தாயின் அன்பையும் அவளின் தற்போதைய நிலையையும் எண்ணி எண்ணி மனம் வருந்தினார். ஒரு ஏகாதசி தினத்தன்று ஷேசாத்ரியைத் தன்னருகே அழைத்த மரகதம் “அம்ப சிவே” என்னும் தன் பெரியப்பாவும், தன்னை வளர்த்தவருமான காமகோடி சாஸ்திரிகளின் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டாள். இயன்றவரை தானும் பாடினாள். பின்னர் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தில் இருந்து
“ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன் முக்தி” என்ற ஸ்லோகத்தை சேஷாத்ரியின் மார்பில் அடித்து மும்முறை கூறினாள். இப்படியாக அன்னை மூலமே சேஷாத்ரி பிரம்ம ஞான தத்துவத்தை உபதேசம் பெற்றார். இதன் பின்னர் அருணாசல, அருணாசல, அருணாசல என்று மும்முறை வாய்விட்டுக் கூறினாள். அருணாசல மகிமையைக்கூறும் ஸ்லோகத்தையும் தன் மைந்தன் நெஞ்சில் கை வைத்துக் கூறினாள். அதோடு அவள் உயிர் பிரிந்தது. தாயும் இன்றித் தகப்பனும் இன்றிச் சித்தப்பாவின் ஆதரவோடு வாழ ஆரம்பித்தனர் சகோதரர் இருவரும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமையால் அண்ணன் குழந்தைகளைத் தம் கண்மணி போல் பாவித்து வளர்த்து வந்தார் ராமசுவாமி ஜோசியர்.
Monday, November 28, 2011
சேஷாத்ரி ஸ்வாமிகள் 2

1870-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 22-ஆம் நாள், சனிக்கிழமை, ஹஸ்த நக்ஷத்திரம் கூடிய நல்ல நாளில் மரகதத்திற்கு காமாட்சி தேவியின் அருட்பிரசாதமாக ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு சேஷாத்ரி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். பராசக்தியின் அருளால் பிறந்த அந்தக் குழந்தை இயற்கையாகவே தெய்வசிந்தனையோடும், இறைவழிபாட்டில் ஆர்வத்தோடும் காணப்பட்டது. தாயாரும் குழந்தைக்குப் பல ஸ்லோகங்களைச் சொல்லிக்கொடுத்தார். தாய் பாடுவதைக் கேட்டுக் கேட்டு மகனுக்கும் இசையில் ஆர்வம் மிகுந்தது. நான்காம் வயதிலேயே கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம், மூக பஞ்சசதி, குரு ஸ்துதி போன்றவற்றைக் கற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தான். வரதராஜ ஜோசியருக்கோ தன் மகனின் புத்தி கூர்மையைக் கண்டும், வித்வத்தைக் கண்டும் ஆனந்தம் அதிகம் ஆனது. தன் சீடர்களுக்குப்பாடம் சொல்லிக் கொடுக்கையில் மகனைத் தன் மடியில் வைத்துக்கொண்டே சொல்லிக் கொடுத்துவந்தார். ஆகவே குழந்தைக்கு நாளாவட்டத்தில் அந்த வேதாந்தப் பாடங்களும் அத்துபடியாயின.
தந்தையோடு தானும் தியானத்தில் அமருவான். தாயோடு தினம் தினம் எல்லாக் கோயில்களுக்கும் போவான். ஒருநாள் தாயுடன் ஶ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றார் சேஷாத்ரி. அங்கே ஒருவர் வரப்போகும் திருவிழாவில் விற்பனை செய்ய வேண்டி ஒரு மூட்டை நிறைய பாலகிருஷ்ணனின் விக்ரஹங்களை எடுத்து வந்திருந்தார். அதைக் கண்டு சேஷாத்ரியாகிய குழந்தை தனக்கும் ஒரு பொம்மை விளையாட வேண்டுமென்று தாயிடம் கெஞ்சிக் கேட்டது. தாயோ அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. குழந்தை மேலும் மேலும் கெஞ்ச, பொம்மை விற்பவர் குழந்தையின் அழகிலும், அது கெஞ்சும் விதத்திலும் மனம் கவரப்பட்டுக் குழந்தைக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். அதன் தாயைப் பார்த்து, “தாயே, உங்கள் குழந்தையே ஒரு கிருஷ்ண விக்ரஹம். நடமாடும் விக்ரஹம். ஆனாலும் அது ஆசைப்பட்டு ஒரு விக்ரஹம் கேட்குது. நீ வாங்கித் தர வேண்டாம். நானே தருகிறேன். ஒரு விக்ரஹத்தை எடுத்துக்கொள்ளச் சொல்!” என்ற வண்ணம் மூட்டையைப் பிரித்துக் குழந்தையைத் தன் கையாலேயே ஒரு பொம்மையை எடுக்கச் சொன்னார். குழந்தையும் மூட்டைக்குள் கைவிட்டு ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டது. மரகதம் எவ்வளவோ கெஞ்சியும் பொம்மை விற்பவர் பொம்மைக்குரிய காசை வாங்க மறுத்துவிட்டார்.
ஆச்சரியவசமாக அவருக்கு அன்று மாலைக்குள்ளாக எல்லா பொம்மைகளும் விற்றுப் போக அவர் இது அத்தனையும் சேஷாத்ரியின் மகிமையே என்பதைப் புரிந்து கொண்டார். மறுநாள் குழந்தையுடன் கோயிலுக்கு வந்த மரகதத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமடைந்து ஓடோடி வந்து சேஷாத்ரியின் தாயார் மரகதம் கால்களில் விழுந்து வணங்கினார். அவள் ஒன்றும் புரியாமல் விழிக்க, வியாபாரி, அவளைப் பார்த்து அவள் மகன் சாதாரணக் குழந்தை அல்ல என்றும் அதிருஷ்டக்குழந்தை எனவும் கூறினார். மேலும் தான் கொண்டு வந்த பொம்மைகள் எல்லாமே ஒரே நாளைக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், எத்தனையோ திருவிழாவுக்குப் போயிருக்கும் தான் நூறு பொம்மை கூட விற்க முடியாமல் திண்டாடி இருப்பதாகவும் சேஷாத்ரி கை வைத்த வேளை அமோகமான விற்பனை எனவும் கூறிவிட்டு, குழந்தைக்குத் தங்கக்கை என்று கூறியவண்ணம் அந்தக் கைகளைத் தொட்டுக் கண்களில் ஒத்திக்கொண்டார். குழந்தைக்கு முத்தமாரி பொழிந்தார். அன்றிலிருந்து சேஷாத்ரிக்கு “தங்கக்கை சேஷாத்ரி” என்ற பெயர் ஏற்பட்டது. அந்தக் கிருஷ்ண விக்ரஹம் பின்னாட்களில் அவரின் தம்பியின் வாரிசுகளிடம் இருந்ததாயும், பின்னர் காஞ்சி ஶ்ரீபரமாசாரியாரிடம் சேர்ப்பிக்கப்பட்டதாயும் தெரிய வருகிறது.
சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு ஐந்தாவது வயதில் வித்யாரம்பம் நடந்தது. தாத்தா காமகோடி சாஸ்திரியாரும் ஸாரஸ்வத மஹாபீஜ மந்திரத்தை தர்ப்பையினால் பேரப்பிள்ளையின் நாவில் எழுதி, பஞ்சாக்ஷரத்தையும் அஷ்டாக்ஷரத்தையும் உபதேசம் செய்வித்தார். அம்பிகையின் இன்னருளால் பிறந்த தவப் புதல்வனாம் சேஷாத்ரியிடம் கலைமகள் கைகட்டிச் சேவகம் புரிந்தாள். வயதுக்கு மீறிய அறிவோடு அனைத்துப் பாடங்களையும் திறம்படக் கற்றார். கம்பராமாயணம், திருக்குறள், நன்னூல், நைடதம் அனைத்தையும் கற்றதோடு அன்னையிடம் முறைப்படி சங்கீதமும் கற்றுக் கொண்டார். எழாம் வயதில் உபநயனம் செய்வித்தனர். தாத்தா காமகோடி சாஸ்திரிகள் காயத்ரி மந்திர மகிமை குறித்தும், சந்தியாவந்தனத்தின் அவசியம் குறித்தும் பேரனின் மனதில் பதியும்படி எடுத்துக்கூறினார். வேதபாடசாலையில் முறைப்படி சேர்த்து வேதாத்யயனமும் கற்க வைத்தார். தர்க்கம், வியாகரணம் அனைத்தையும் பயின்றபின்னர் தனக்குத் தெரிந்த அத்யாத்ம வித்தையையும், மந்திர ரகசியங்களையும் பேரப்பிள்ளைக்குக் கற்றுக்கொள்ள வைத்தார். அனைத்தும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தன. ஒருநாள் வழக்கம்போல் பாடசாலைக்குச் செல்லும் முன்னர் தந்தையை நமஸ்கரித்த சேஷாத்ரியைக் கட்டிக்கொண்டு தந்தை கண்ணீர் வடித்தார். அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.
Friday, November 25, 2011
ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்-- பகுதி ஒன்று
சேஷாத்ரி ஸ்வாமிகள்:
காஞ்சி நகரின் காமாட்சி அன்னையை ஆராதிப்பதற்காக ஆதி சங்கரர் சில உபாசனா முறைகளைத் தோற்றுவித்ததோடு அல்லாமல் அவற்றைச் சரிவர நடத்துவதற்காக, நர்மதா நதிக்கரையில் இருந்து தேவி உபாசகர்களான முப்பது பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு காஞ்சிக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஶ்ரீ காமாட்சி தேவியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு ஶ்ரீவித்யையைப் பரப்பி வந்தனர். அவர்கள் காலத்திலிருந்து தேவி பக்தியும், ஶ்ரீவித்யை உபாசனையும் செழித்து வளரத் தொடங்கியது. மக்கள் அவர்களைக் காமகோடியார் என அழைக்க ஆரம்பித்தனர். ஏனெனில் காஞ்சியின் காமாட்சி அம்மன் மட்டுமின்றி காஞ்சி நகரமே ஶ்ரீபராசக்தியின் ஶ்ரீசக்ரபீடத்தின் உருவாகவும் அம்மன் குடி கொண்டிருக்கும் காமகோடி பீடம் ஶ்ரீசக்கரத்தின் பிந்துவாகவும் கருதப்படுகிறது. அதை வழிபட்டு வந்த குலத்தவர்களைக் காமகோடியார் என்பது சரிதானே! இவர்கள் வேத அத்யயனம் செய்தவர்கள் மட்டுமல்லாமல், இதிகாசப் புராணங்களையும் நன்கறிந்தவர்கள். ஒரு சிலர் ஜோசிய சாத்திரத்திலும் வல்லவர்களாய் இருந்தனர். காமாட்சி கோயிலில் மட்டுமில்லாமல் ஶ்ரீவரதராஜர் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் உரிமையும், மான்யங்களும் பெற்றிருந்தனர்.
இந்தக் காமகோடியார் மரபில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காமகோடி சாஸ்திரிகள் என்ற பெயரில் ஒரு மகான் அவதரித்தார். ஆசாரசீலரான அவர் அம்பிகையின் வழிபாடு மட்டுமின்றி, ஈசனையும் துதித்துப் பல பாடல்கள வடமொழியிலும், தெலுங்கிலும் இயற்றி இருக்கிறார் அபாரமான சங்கீத ஞானம் உடைய இவர் கல்லும் கரையும் வண்ணம் பாடல்களைப் பாடிவருவார். இவர் வீடே ஒரு பர்ணசாலை போல் அமைதியும், எழிலும் நிறைந்து காணப்படும். அவர் சிலரின் வேண்டுகோளின்படி அருகிலுள்ள வழூர் என்னும் சிற்றூருக்குச் சென்று தங்கினார். ஆனால் அவருக்கு ஆண் குழந்தைப்பேறில்லாமல் மனம் வருந்தினார். ஒரே ஒரு மகளைப் பெற்றிருந்த அவர் தம் அண்ணனான சிதம்பர சாஸ்திரிகளின் இரு பெண் குழந்தைகளையும் தம் சொந்தப் பெண்களாகவே வளர்த்து வந்தார். அவர்கள் இருவரில் கடைக்குட்டியான மரகதம் சிறு வயதிலேயே அபார புலமையோடும், அழகும், நற்குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தாள். சாஸ்திரிகளும் அவளுக்குப் புராணக்கதைகள், தர்ம சாத்திரங்களைக் கற்பித்ததோடு இசையோடு பாடவும் கற்றுத் தந்தார். நாளடைவில் தனது பனிரண்டாம் வயதிலேயே மரகதம், “சாகித்ய சங்கீத கலாநிதி” என்ற பட்டத்தப் பெற்றாள்.
அவளுக்குத் திருமணப்பருவம் வந்துவிட்டதை அறிந்த காமகோடி சாஸ்திரிகள் தக்கமணாளன் தனது மாணவனும், சீடனும் ஆன வரதராஜனே என முடிவு செய்து அவர் தந்தையோடு கலந்து பேசித் திருமணம் நிச்சயித்தார். ஒரு நல்ல முகூர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் செய்வித்தார். மரகதமும், வரதராஜனும் அருமையாகவும், பெருமையாகவும், சீரோடும், சிறப்போடும் தாம்பத்தியம் நடத்தி வந்தனர். இன்முகத்தோடு அனைவரையும் உபசரித்த தம்பதிகள் இருவரும் தர்ம நூல்களையும், புராணக்கதைகளையும் படித்து மகிழ்ந்ததோடு, மாலை வேளைகளில் வரதராஜப் பெருமாளையும், ஶ்ரீகாமாட்சி அன்னையையும் தரிசனம் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர். எல்லாம் இருந்தும் இருவருக்கும் குழந்தைப்பேறே இல்லை. பல விரதங்கள் இருந்தனர். தானங்கள் செய்தனர். திருத்தல யாத்திரைகள் சென்றனர். காமகோடி சாஸ்திரிகளின் மனமும் வருந்தியது. காமாட்சி அன்னையிடம் சென்று அவள் சந்நிதியில் மனமுருகப் பிரார்த்தித்தார். தான் ஏதோ தவறு செய்திருந்தாலும் அதற்காகத் தன் அருமை மகளைத் தண்டிக்க வேண்டாம் என்றும் அம்பிகையின் கடைக்கண் கடாட்சத்தைக் காட்டி ஒரு குழந்தையைக் கொடுத்தருளும்படியும் வேண்டினார். அன்றிரவே காமகோடி சாஸ்திரியாரின் கனவில் அன்னை தோன்றி சாஸ்திரியாரைத் தம்பதிகளுக்கு வெண்ணெய் கொடுக்கும்படி கூறிவிட்டு அந்த வெண்ணெயை உண்ட தம்பதிகளுக்குச் சிறப்பான ஞானக்குழந்தை பிறக்கும் எனவும் கூறி மறைந்தாள்.
மறுநாள் காலை நீராடி அநுஷ்டானங்களை முடித்த காமகோடி சாஸ்திரியார் தம்பதிகளிடம் தாம் கண்ட கனவைக் கூறிவிட்டுப் பராசக்தியை வேண்டிக்கொண்டு, அவளுக்குப் படைத்த பிரசாதமாக வெண்ணெயை இருவருக்கும் கொடுத்தார். மந்திரங்கள், துதிகள், ஜபங்கள் செய்யப்பட்டுப் புனிதமடைந்திருந்த வெண்ணெயை இருவரும் உண்டனர். சில நாட்களில் மரகதம் கருத்தரித்தாள்.
காஞ்சி நகரின் காமாட்சி அன்னையை ஆராதிப்பதற்காக ஆதி சங்கரர் சில உபாசனா முறைகளைத் தோற்றுவித்ததோடு அல்லாமல் அவற்றைச் சரிவர நடத்துவதற்காக, நர்மதா நதிக்கரையில் இருந்து தேவி உபாசகர்களான முப்பது பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு காஞ்சிக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஶ்ரீ காமாட்சி தேவியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு ஶ்ரீவித்யையைப் பரப்பி வந்தனர். அவர்கள் காலத்திலிருந்து தேவி பக்தியும், ஶ்ரீவித்யை உபாசனையும் செழித்து வளரத் தொடங்கியது. மக்கள் அவர்களைக் காமகோடியார் என அழைக்க ஆரம்பித்தனர். ஏனெனில் காஞ்சியின் காமாட்சி அம்மன் மட்டுமின்றி காஞ்சி நகரமே ஶ்ரீபராசக்தியின் ஶ்ரீசக்ரபீடத்தின் உருவாகவும் அம்மன் குடி கொண்டிருக்கும் காமகோடி பீடம் ஶ்ரீசக்கரத்தின் பிந்துவாகவும் கருதப்படுகிறது. அதை வழிபட்டு வந்த குலத்தவர்களைக் காமகோடியார் என்பது சரிதானே! இவர்கள் வேத அத்யயனம் செய்தவர்கள் மட்டுமல்லாமல், இதிகாசப் புராணங்களையும் நன்கறிந்தவர்கள். ஒரு சிலர் ஜோசிய சாத்திரத்திலும் வல்லவர்களாய் இருந்தனர். காமாட்சி கோயிலில் மட்டுமில்லாமல் ஶ்ரீவரதராஜர் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் உரிமையும், மான்யங்களும் பெற்றிருந்தனர்.
இந்தக் காமகோடியார் மரபில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காமகோடி சாஸ்திரிகள் என்ற பெயரில் ஒரு மகான் அவதரித்தார். ஆசாரசீலரான அவர் அம்பிகையின் வழிபாடு மட்டுமின்றி, ஈசனையும் துதித்துப் பல பாடல்கள வடமொழியிலும், தெலுங்கிலும் இயற்றி இருக்கிறார் அபாரமான சங்கீத ஞானம் உடைய இவர் கல்லும் கரையும் வண்ணம் பாடல்களைப் பாடிவருவார். இவர் வீடே ஒரு பர்ணசாலை போல் அமைதியும், எழிலும் நிறைந்து காணப்படும். அவர் சிலரின் வேண்டுகோளின்படி அருகிலுள்ள வழூர் என்னும் சிற்றூருக்குச் சென்று தங்கினார். ஆனால் அவருக்கு ஆண் குழந்தைப்பேறில்லாமல் மனம் வருந்தினார். ஒரே ஒரு மகளைப் பெற்றிருந்த அவர் தம் அண்ணனான சிதம்பர சாஸ்திரிகளின் இரு பெண் குழந்தைகளையும் தம் சொந்தப் பெண்களாகவே வளர்த்து வந்தார். அவர்கள் இருவரில் கடைக்குட்டியான மரகதம் சிறு வயதிலேயே அபார புலமையோடும், அழகும், நற்குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தாள். சாஸ்திரிகளும் அவளுக்குப் புராணக்கதைகள், தர்ம சாத்திரங்களைக் கற்பித்ததோடு இசையோடு பாடவும் கற்றுத் தந்தார். நாளடைவில் தனது பனிரண்டாம் வயதிலேயே மரகதம், “சாகித்ய சங்கீத கலாநிதி” என்ற பட்டத்தப் பெற்றாள்.
அவளுக்குத் திருமணப்பருவம் வந்துவிட்டதை அறிந்த காமகோடி சாஸ்திரிகள் தக்கமணாளன் தனது மாணவனும், சீடனும் ஆன வரதராஜனே என முடிவு செய்து அவர் தந்தையோடு கலந்து பேசித் திருமணம் நிச்சயித்தார். ஒரு நல்ல முகூர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் செய்வித்தார். மரகதமும், வரதராஜனும் அருமையாகவும், பெருமையாகவும், சீரோடும், சிறப்போடும் தாம்பத்தியம் நடத்தி வந்தனர். இன்முகத்தோடு அனைவரையும் உபசரித்த தம்பதிகள் இருவரும் தர்ம நூல்களையும், புராணக்கதைகளையும் படித்து மகிழ்ந்ததோடு, மாலை வேளைகளில் வரதராஜப் பெருமாளையும், ஶ்ரீகாமாட்சி அன்னையையும் தரிசனம் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர். எல்லாம் இருந்தும் இருவருக்கும் குழந்தைப்பேறே இல்லை. பல விரதங்கள் இருந்தனர். தானங்கள் செய்தனர். திருத்தல யாத்திரைகள் சென்றனர். காமகோடி சாஸ்திரிகளின் மனமும் வருந்தியது. காமாட்சி அன்னையிடம் சென்று அவள் சந்நிதியில் மனமுருகப் பிரார்த்தித்தார். தான் ஏதோ தவறு செய்திருந்தாலும் அதற்காகத் தன் அருமை மகளைத் தண்டிக்க வேண்டாம் என்றும் அம்பிகையின் கடைக்கண் கடாட்சத்தைக் காட்டி ஒரு குழந்தையைக் கொடுத்தருளும்படியும் வேண்டினார். அன்றிரவே காமகோடி சாஸ்திரியாரின் கனவில் அன்னை தோன்றி சாஸ்திரியாரைத் தம்பதிகளுக்கு வெண்ணெய் கொடுக்கும்படி கூறிவிட்டு அந்த வெண்ணெயை உண்ட தம்பதிகளுக்குச் சிறப்பான ஞானக்குழந்தை பிறக்கும் எனவும் கூறி மறைந்தாள்.
மறுநாள் காலை நீராடி அநுஷ்டானங்களை முடித்த காமகோடி சாஸ்திரியார் தம்பதிகளிடம் தாம் கண்ட கனவைக் கூறிவிட்டுப் பராசக்தியை வேண்டிக்கொண்டு, அவளுக்குப் படைத்த பிரசாதமாக வெண்ணெயை இருவருக்கும் கொடுத்தார். மந்திரங்கள், துதிகள், ஜபங்கள் செய்யப்பட்டுப் புனிதமடைந்திருந்த வெண்ணெயை இருவரும் உண்டனர். சில நாட்களில் மரகதம் கருத்தரித்தாள்.
Wednesday, November 16, 2011
வேண்டுகோள்
கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பக்கத்தில் பதிவிட இயலாது. குறிப்புப் புத்தகங்கள் எல்லாம் இந்தியாவில். சிரமத்துக்கு மன்னிக்கவும். இயன்றபோது நினைவில் இருப்பதை எழுதுகிறேன். நன்றி.
Saturday, August 20, 2011
ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!
சொல்லின் செல்வனான அனுமன் பேசி முடித்ததும் ராமர் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்தோம். அதோடு இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் சிறு வயதிலேயே அறிந்தவர்கள் எனவும் பார்த்தோம் அல்லவா? ஒருவருக்கென மற்றவர் பிறந்திருக்கிறார்கள். அதை இப்போதே அறிந்து கொள்ளவும் போகின்றனர். நடுவில் மாயை இருவரையும் சேர விடாமல் தடுத்தது எனலாமா? அல்லது சரியான நேரத்தில் தான் ராமனை அடையவேண்டும் என அனுமன் எண்ணியதாய்க் கொள்ளலாமா? எது எவ்வாறாயினும் அனுமனின் தூது நன்மையாகவே முடிந்தது. ராமரின் பேச்சைக்கேட்ட லக்ஷ்மணனும் மகிழ்வோடு அனுமனைப் பார்த்து, தாங்கள் இருவரும் சுக்ரீவனின் நட்பை நாடியே வந்திருப்பதாய்க் கூறினான். சுக்ரீவனின் ஆணையை ஏற்று எங்களைக் காண இங்கே வந்திருக்கும் அனுமனின் விருப்பம்போல் நடப்போம் என்றும் கூறினான். அனுமனுக்கோ மட்டில்லா மகிழ்ச்சி. ‘என் அரசனான சுக்ரீவனுக்கு அரசாட்சி மீண்டும் கிடைக்கும் நேரம் வந்துவிட்டது போலும். அதனாலேயே இவ்வளவு உயர்ந்த மனிதர்களின் நட்பு கிடைக்கிறது. ‘என்றெல்லாம் எண்ணி மகிழ்ந்த அனுமன் ராமரிடம் காட்டுக்கு வந்த காரணத்தை வினவினான்.
லக்ஷ்மணன் ராமரின் கதையை மீண்டும் ஒரு முறை அனுமனிடம் கூறுகிறான். ராமன் தகப்பன் சொல்லுக்காகப் பட்டத்தைத் துறந்ததில் இருந்து இப்போது ஸீதை அபகரிக்கப்பட்டது வரையிலும் அனைத்தையும் சொல்லி முடித்தான். ராமாயணத்தில் இவ்வாறு பலமுறை ராமாயணம் பலராலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். பின்னர் சுக்ரீவனைப் பற்றிக் கபந்தன் என்னும் கந்தர்வன் சொன்ன விஷயங்களைக் கூறிய லக்ஷ்மணன் அவன் சொன்னதாலேயே சுக்ரீவனை நாடி தாங்கள் வந்திருப்பதாயும், உலகத்தைப் பாதுகாக்கும் வல்லமை படைத்த ராமன் இப்போது சுக்ரீவனின் உதவியை நாடி அவனிடம் அடைக்கலம் நாடி வந்திருப்பதைக் கூறுகிறான். மனைவியை இழந்து ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கி இருக்கும் ராமருக்கு வேண்டிய உதவிகளை சுக்ரீவன் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறான். அவ்வளவில் அனுமன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது தங்கள் அதிர்ஷ்டம் எனவும், வாலியினால் துன்புற்று மனைவியை இழந்து, ராஜ்யத்தையும் இழந்து ஒவ்வொரு இடமாக அலையும்சுக்ரீவனுக்கு உங்கள் உதவி தேவைப்படும். எனக்கூறிவிட்டு அவர்களைத் தன் தோளில் சுமந்த வண்ணம் சுக்ரீவன் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் அனுமன்.
சுக்ரீவனிடம் ராமரின் பெருமையை எடுத்துக்கூறி அத்தகைய பெருமை வாய்ந்த ராமர் இப்போது சுக்ரீவனின் உதவியை நாடி வந்திருப்பதையும் கூறுகிறான். சுக்ரீவனோ தர்மத்தின் பாதையில் இருந்து தவறாத ஸ்ரீராமர் தன் நட்பை நாடி வந்திருப்பது தனக்குச் செய்த கெளரவம் எனக் கூறி விட்டுத் தன் கையை நீட்டி ராமரைப் பிடிக்கச் சொல்லி தனது நட்பை ராமருடன் உறுதி செய்து கொள்கிறான். ராமரும் அவ்வாறே சுக்ரீவனின் கையை இறுகப் பற்ற அனுமன் அக்னியை மூட்ட, இருவரும் அக்னியை வலம் வந்து வணங்கி, இனித் தங்கள் இன்பம், துன்பம் அனைத்தும் ஒன்றே எனக்கூறி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இதைக்கம்பர் கூறுகையில்
"மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார் தீயேரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல்
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர்த்துணைவன் என்றான்.
என்று கூறுகிறார்.
லக்ஷ்மணன் ராமரின் கதையை மீண்டும் ஒரு முறை அனுமனிடம் கூறுகிறான். ராமன் தகப்பன் சொல்லுக்காகப் பட்டத்தைத் துறந்ததில் இருந்து இப்போது ஸீதை அபகரிக்கப்பட்டது வரையிலும் அனைத்தையும் சொல்லி முடித்தான். ராமாயணத்தில் இவ்வாறு பலமுறை ராமாயணம் பலராலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். பின்னர் சுக்ரீவனைப் பற்றிக் கபந்தன் என்னும் கந்தர்வன் சொன்ன விஷயங்களைக் கூறிய லக்ஷ்மணன் அவன் சொன்னதாலேயே சுக்ரீவனை நாடி தாங்கள் வந்திருப்பதாயும், உலகத்தைப் பாதுகாக்கும் வல்லமை படைத்த ராமன் இப்போது சுக்ரீவனின் உதவியை நாடி அவனிடம் அடைக்கலம் நாடி வந்திருப்பதைக் கூறுகிறான். மனைவியை இழந்து ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கி இருக்கும் ராமருக்கு வேண்டிய உதவிகளை சுக்ரீவன் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறான். அவ்வளவில் அனுமன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது தங்கள் அதிர்ஷ்டம் எனவும், வாலியினால் துன்புற்று மனைவியை இழந்து, ராஜ்யத்தையும் இழந்து ஒவ்வொரு இடமாக அலையும்சுக்ரீவனுக்கு உங்கள் உதவி தேவைப்படும். எனக்கூறிவிட்டு அவர்களைத் தன் தோளில் சுமந்த வண்ணம் சுக்ரீவன் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் அனுமன்.
சுக்ரீவனிடம் ராமரின் பெருமையை எடுத்துக்கூறி அத்தகைய பெருமை வாய்ந்த ராமர் இப்போது சுக்ரீவனின் உதவியை நாடி வந்திருப்பதையும் கூறுகிறான். சுக்ரீவனோ தர்மத்தின் பாதையில் இருந்து தவறாத ஸ்ரீராமர் தன் நட்பை நாடி வந்திருப்பது தனக்குச் செய்த கெளரவம் எனக் கூறி விட்டுத் தன் கையை நீட்டி ராமரைப் பிடிக்கச் சொல்லி தனது நட்பை ராமருடன் உறுதி செய்து கொள்கிறான். ராமரும் அவ்வாறே சுக்ரீவனின் கையை இறுகப் பற்ற அனுமன் அக்னியை மூட்ட, இருவரும் அக்னியை வலம் வந்து வணங்கி, இனித் தங்கள் இன்பம், துன்பம் அனைத்தும் ஒன்றே எனக்கூறி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இதைக்கம்பர் கூறுகையில்
"மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார் தீயேரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல்
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர்த்துணைவன் என்றான்.
என்று கூறுகிறார்.
Subscribe to:
Posts (Atom)